வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணி, தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலையை எழுத்தர் நல்லசிவம் வரவேற்புரை ஆற்றினார். போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் ஒரே கலரில் வேஷ்டி சட்டை அணிந்து வந்தனர்.