வேடசந்தூர் திமுகவின் சார்பில் ஆத்து மேட்டில் மிகப்பிரம்மாண்டமான தேர்தல் அலுவலகம் செயல்படுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பிரம்மாண்டமான சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கவிதா முருகன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பண்ணை கார்த்திகேயன், வேடசந்தூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தனர்.