துறையூர்: துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் அங்கன்வாடி மையம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹13.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்த மையத்தை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இந்நிகழ்வில் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.