தருமபுரி: அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் - 2025 மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் - 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். கலெக்டர் சதீஷ் தகவல்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் - 2025 மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் - 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். பொது விநியோகத் திட்டத்தின்கீழ் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவர