சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற 72வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா தூத்துக்குடி சத்திரம் தெருவில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 7 கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூட்டுறவு கடன் சங்கத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.