வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் சுக்காம்பட்டி ஊராட்சி எஸ் குரும்பபட்டி பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கிராம மக்கள் காலி குடங்களுடன் அந்த கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி செயலர் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.