தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இதில் தமிழகம் முழுவதும் 1353 ஆம்புலன்ஸ் சேவையில் 7000க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் இரவு பகல் என இரண்டு ஷிப்ட் முறையில் சட்ட விரோதமாக 12 மணி நேரம் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.