வேடசந்தூர் ஆத்துமேட்டில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றி ஒன்பதாவது பிறந்தநாள் விழா அதிமுகவின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மேடையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான் போஸ் தலைமை வகித்தார். வேடசந்தூர் பேரூர் செயலாளர் பாபு சேட் முன்னிலை.