ஊத்தங்கரையில் அதிகரித்துள்ள தெருநாய் தொல்லை: மாணவ மாணவிகள், முதியவர்கள் அச்சம்! கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தெருநாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிவதால், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், முதியோர் மற்றும் பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.