திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக அகில இந்திய தலைமை காசிபாளையம் சாமி நாதனை அறிவித்தது. இதனை அடுத்து வடமதுரை வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.