திருச்செந்தூர்: சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரை முன்பு இரண்டாவது நாளாக கடல் சுமார் 200 அடி உள்வாங்கி காணப்படுகிறது
திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்படுகிறது. இன்று காலை முதல் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.நேற்று திருச்செந்தூர் கோவில் உள்ள கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக காலை திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடல் திடீரென 200 அடி உள்வாங்கி காணப்படுகிறது.