தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி வளாகப் பகுதியில் புதிதாக சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பில் ஏழு மாடிகளில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டது இந்த நிலையில் இந்த மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அரசாணையை திமுக அரசு வெளியிட்டுள்ளது.