தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராம கடற்பகுதி மற்றும் அருகே உள்ள பட்டினம் மருதூர் கடற்பகுதி வரை பல கிலோமீட்டர் தூரம் திடீரென கடல் நீல நிறத்தில் இருந்து அரக்கு நிறமாக கடல் நீர் நிறம் மாறி காணப்படுகிறது. மேலும், அரக்கு கலரிலான கடல் பஞ்சு போன்று சிறு சிறிய பஞ்சுகளாக கடற்கரை பகுதியில் ஒதுங்கி வருகிறது கடலில் ஏற்பட்ட இந்த நிறம் மாற்றம் காரணமாக தருவைகுளம் பட்டினமருதூர் பகுதி மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.