விருத்தாசலம்: நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் துவக்கி வைப்பு
தமிழகம் முழுவதும் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை நகர்மன்ற தலைவர் டாக்டர்.சங்கவி முருகதாஸ் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து போட்டு துவக்கி வைத்தார். விருத்தாசலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 18 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 5 வயதுக்குட்பட்ட 8,616 குழந்தைகளுக்கும், 5 முதல் 6 வயதுக்குட்பட்ட 1,287 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.