தூத்துக்குடி: சுமார் ரூ.85 லட்ச மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் மாநகராட்சி மாநாட்டு மையத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுமார் 85 லட்ச ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அடையாள அட்டைகள் வழங்கும் விழா மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.