வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை பரவலாக பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் டிட்வா புயல் காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.