வடமதுரை ஒன்றியம் அய்யலூர் பேரூராட்சி 15 வது வார்டு காக்கையன்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எல் தர்மராஜ் கலந்து கொண்டார். வடமதுரை ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். அய்யலூர் பேரூர் செயலாளர் ஆண்டி பேரூர் இணைச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை.