தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சுடலை முத்து (25). கூலி தொழிலாளி. இவர் இன்று காலை 10:30 மணி அளவில் அங்குள்ள ஒரு சினிமா தியேட்டர் முன்பு நின்று நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2பேர் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.