கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி மூன்று பேரால் கூட்டு பாலியல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி பாரதிய ஜனதா கட்சி சார்பில் விவிடி சிக்னல் அருகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.