கடந்த 09.10.2025 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட மேலவாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தர்மாகுட்டி மகன் ஆறுமுகநைனார் (23), ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சுடலைகண்ணு (24) மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (23) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று மூன்று பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.