தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தமிழக அரசு காட்டுப் பன்றிகளால் உயிரிழக்கும் விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.