தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகன ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபாவளி போனஸ் கேட்டு இவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு வார்த்தையின் பேரில் இவர்களுக்கு ரூபாய் 3000 ரூபாய் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது.