திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குதிரைகுத்திபட்டி பாலமுருகன் பாதயாத்திரை குழு கிராம மக்கள் 47 ஆம் ஆண்டாக 80 பக்தர்கள் குருசாமி சின்னையா தலைமையில் பாதயாத்திரை சென்றனர். பாதயாத்திரை வேடசந்தூர் அடுத்த ஆஞ்சநேயர் கோவில் முன்பாக சென்ற பொழுது கோலாட்டம் ஆடி அசத்தினர். அதேபோல் மணப்பாறை அருகே உள்ள எடத்தெரு கிராம மக்கள் 37 ஆம் ஆண்டு குருசாமி நடேசன் தலைமையில் பாதயாத்திரை சென்றனர்.