தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் விவேகானந்தர் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் ஒருவர் கைது
தூத்துக்குடி தாளமுத்து நகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் இருந்து படகுமூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 900 கிலோ பீடி இலைகள் இருப்பதைக் கண்ட க்யூ பிரிவு போலீசார் அவற்றை பறிமுதல் செய்து லோடு வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி தாளமுத்து நகர் டேவிஸ் புரம் கருப்பசாமி நகர் உமா விஜயகுமாரை கைது செய்தனர்.