தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவசுப்பிரமணியன் இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சந்தை ரோடு தபால் அலுவலகம் அருகே ஸ்ரீ லட்சுமி பைனான்ஸ் என்ற அடகு கடை நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த அடகு கடையில் நகை அடகு வைத்தால் வட்டி எதுவும் இல்லாமல் பணம் தரப்படும் என சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விளம்பரம் செய்தும் தனது கடையில் அந்த விளம்பர வாசகத்தை எழுதியும் மக்களை இவரது கடையில் நகை அடகு வைக்க ஈர்த்துள்ளார்.