பொட்டலூரணி கிராம விலக்கு பகுதியில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும். பொட்டலூரணி கிராமம் அருகே செயல்பட்டு வரும் மீன் கழிவுகளை மூட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.