தூத்துக்குடி மாவட்டத்திற்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிற 19 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது பலத்தமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.