ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.