வேதாரண்யம்-நாகப்பட்டினம் சாலையில் பழைய அஞ்சலகம் அருகே நேற்று இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வேதாரண்யம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நாகை ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.