தூத்துக்குடி: முத்தையாபுரம் அய்யன்கோவில் பகுதியில் வடமாநில நபரை தாக்கி
செல்போனை பறிப்பு 2 பேர் கைது மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன்கோவில் பகுதியில், தெருவில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த ஸ்பிக் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் (48) என்பவரை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய அய்யன் கோவில் தெருவை சேர்ந்த ராமர் மகன் சதீஷ்குமார் (20) மற்றும் ஆரோக்கிய ராஜ் மகன் செல்வம் (19) ஆகிய இருவரை முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர்.