தூத்துக்குடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 206 மாற்றுத்திறனாளிகளுக்கு 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்த கணக்கெடுப்பு வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.