மார்கழி மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி நம்மாழ்வார் தெருவில் உள்ள ராமானுஜசபா சார்பில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மார்கழி மாத பஜனை 30 நாட்களும் நடைபெறுகிறது. இந்த பஜனையில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் அதிகாலை எழுந்து குளித்து பூஜை செய்து திருப்பாவை, திருவெம்பாவை ,தேவாரம் ராமபிரான் கிருஷ்ணர் ஆண்டாள் புகழ் பாடும் பக்திமனம் மகிழும் பஜனை பாடல்களை இசைக்கேற்ப பாடியபடி வீதி உலா சென்றனர்.