புரசைவாக்கம்: சென்னை உயர்நீதிமன்றம் சென்ட்ரலில் மெட்ரோ ரயில் பழுதாகி நடுவழியில் நின்றது
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி மெட்ரோ ரெயில் சென்றுகொண்டிருந்தது. சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நடுவழியில் நின்றது. மின்சார கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரெயில் நடுவழியில் நின்றதாக கூறப்படுகிறது.20 நிமிடங்கள் தாமதத்துக்கு பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டது.