இந்திய தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இழுவை படகானது 60 டன் திறன் மற்றும் 498 டன் மொத்த உட்புற கன அளவை கொண்ட இந்த இழுவை படகு தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்த இழுவை படகின் சேர்க்கையால் வஉசி துறைமுகத்தின் செயல்திறன் பெரிதும் மேம்படும். பெரிய கப்பல்களின் பாதுகாப்பான கையாளும் திறனை (நிறுத்தம் மற்றும் புறப்பாடு) உறுதி செய்யப்பட்டு துறைமுகத்தினுள் கப்பல்கள் வந்து செல்லும் நேரம் குறைக்கப்படும்.