திருப்பத்தூர்: பீகாரில் நடந்தது போல் வாக்கு திருட்டு தமிழகத்தில் நடக்காது – திருப்பத்தூரில் அமைச்சர் அலுவலகத்தில் பெரியகருப்பன் சவால்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து, 2026 தேர்தல் மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 2,19,011 குடும்பங்களில் இருந்து 5,00,403 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். என்றார்