வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக நிறைமாத கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட பொழுது வடமதுரை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கனகுபாண்டி, மருத்துவ உதவியாளர் பிரதீபா ஆகியோர் வீட்டுக்கு சென்றனர். ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு முன்பே அதிகமான வலி இருந்ததால் மருத்துவ உதவியாளர் பிரதீபா தானே பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றினார்.