ஸ்ரீவைகுண்டம்: பொட்டலூரணி விலக்கில் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பொட்டலூரணி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.