தூத்துக்குடி மாநகர பகுதியில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை உள்ளே செல்லும் நுழைவு வாயில் பகுதி மற்றும் மகப்பேறு பிரிவு குழந்தைகள் வார்டு காய்ச்சல் பிரிவு மற்றும் மனநல மருத்துவ பிரிவு மேலும் சமையல் செய்யும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது.