தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கணேசபுரம் வார்டு 15ல் கடந்த 120 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து காட்டு நாயக்கன் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்து காட்டு நாயக்கன் சமூக மக்கள் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் முற்றுகையிட்டனர்.