இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இளம் பகவத் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.