திருக்குவளை: திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ்,  இன்று(04.10.2025) சனிக்கிழமைபார்வையிட்டார். இந்த நிகழ்வில் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பி.நாகை மாலி அவர்கள் கலந்து கொண்டார்.