தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆழ்வார்சாமி. இவர் பூவாணி கிராமத்தில் உள்ள 3.5 ஏக்கர் நிலத்தில்,உளுந்து, நெல் சாகுபடி செய்தும், ரோஜா தோட்டம் அமைத்தும் உள்ளார். இந்த தோட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் காற்றாலை நிறுவன மேலாளர்கள் சுகுமார், பாண்டியராஜன் உள்பட 15 பேர் வந்து பொக்லைன் மூலம் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை அப்புறப்படுத்தினர். இதையறிந்த ஆழ்வார்சாமி மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.