முருநெல்லிகோட்டை ஊராட்சி சல்லையகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிவேல். இவர் தனது கிராமத்தில் இருந்து சுள்ளெரும்பில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையை கடக்க முற்பட்ட பொழுது தாடிக்கொம்பை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பழனிவேல் உயிரிழந்தார்.