திமுக அரசின் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர், சகோதரர்கள் மீதான அளவுக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்து உள்ள நிலையில் வழக்கு விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.