நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி வாரச்சந்தையில் 35 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்காக சந்தை நடக்கிறது. இன்று செப். 16 நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் & வியாபாரிகள் ஆடுகளை விற்க & வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.3,000 முதல் ரூ.22,000 வரை மொத்தம் 35 லட்சத்துக்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாகவும் புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால் ஆடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.