திருச்செந்தூர்: பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் வீரபாண்டியன்
பட்டனத்தில் அவரது மணிமண்டபத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது 90வது பிறந்த நாளையொட்டி முழுவுருவசிலைக்கு அரசு சார்பில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.