முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ராணுவ வீரர்களுக்கான நினைவாலயம் அமைக்கப்பட உள்ளதால் அந்த இடத்திற்கான பட்டாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பியுமான துரை வைகோ மனு அளித்தார். மேலும் கயத்தாறு பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை கோரினார்.