தூத்துக்குடி மாவட்ட கூடை பந்தாட்ட கழக தலைவர் பிரம்மானந்தம் செயலாளர் சாகுல் சிவாஜிதீன், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக சவுத் ராஜா தெருவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி துறைமுக ஆணைய கோப்பைக்கான அகில இந்திய அளவிலான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நாளை நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.