வடமதுரை அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆலம்பட்டி மலை அடிவாரம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய ஆலம்பட்டியைச் சேர்ந்த சிவபெருமாள், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி, சதீஷ்குமார், அடைக்கனூரை சேர்ந்த கணேஷ்குமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.