தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 1500க்கும் மேற்பட்ட செவிலியர்கள், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.